மேற்படி இடத்தில் பொது நூலகத்திற்கான குடில் அமைக்கப்பட்டு நாட்டாண்மை அப்துல் ஹகீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. புதுவை பிரமுகர் ஹாஜி த.கு. முஹம்மது சையீத் பெருந்தொகைக்குப் புத்தகங்கள் அன்பளித்தார். இதே ஆண்டு அஞ்சுமன் இதர சங்கங்களுடன் இணைந்து மாபெரும் மீலாது மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் பெருமை வெகுகாலம் பேசப்பட்டது.