Anjuman News

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று(26/01/2025) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஜெ. கிருஷ்ணமூர்த்திஅவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
Read more

அஞ்சுமன் நூற்றாண்டு விழா: சிறப்பான தொடக்க நிகழ்ச்சி

அஞ்சுமன் நூற்றாண்டு செய்தியை ஊர் பிரமுகர்களுக்கு முன் வெளிப்படுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை சிறப்பான முறையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்த team Anjuman உறுப்பினர்களுக்கு பாராட்டும் நன்றியும்..”
Read more

நாகரத்தினம் கிருஷ்ணா உடன் உரையாடல்

நாளை காலை 10.00 மணியளவில்.. அஞ்சுமன் நூலகம் வழங்கும் நூல் நுகர் மேடை.. சைகோன் புதுச்சேரி பிரெஞ்சு காலனிய வாழ்வியலை மையப்படுத்திய சமூக வரலாற்று நாவலின் ஆசிரியர் #நாகரத்தினம்_கிருஷ்ணா அவர்களுடன் சந்திப்பு – உரையாடல் அனைவரும் வருக..
Read more

அஞ்சுமன் நூற்றாண்டுக்கான சிறப்பு திட்டங்கள்

அன்பார்ந்த அஞ்சுமன் ஆதரவாளர்களே.. நண்பர்களே.. அஞ்சுமன் தனது நூற்றாண்டை நோக்கி நகர்கிறது.. அஞ்சுமன் நூற்றாண்டாக 2025 – 26 ஒரு வருட காலம் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.. அதற்கு முன்கூட்டியே நூற்றாண்டு சிறப்பு செயல்பாடாக கோட்டக்குப்பம் இளைய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பல்வகை பயிற்சி பட்டறைகள், கலை – இலக்கிய ஊக்குவிப்பு, ஆற்றல்படுத்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் இடமளிக்கும் அஞ்சுமன் அகாடமியும் – தமிழ் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட வரலாறு, அதன் பண்பாட்டு நகர்வுகள், அரசியல், இலக்கியம் […]
Read more

அஞ்சுமன் நாள் மற்றும் நூலக நேயர் தினம்

காலங்களைக் கடந்து சிந்தித்த அஞ்சுமன் நிறுவனர் காஜி மௌலவி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாக்கவி அவர்களின் பெருமுயற்சியால் நிறுவப்பட்ட அஞ்சுமன், அவருக்கு நன்றிகூறும் வகையில் ஆகஸ்ட் 11 ஆம் நாளை அஞ்சுமன் நாளாக அனுஷ்டிக்கிறது. இவ்வாண்டு முதல் அஞ்சுமன் நாள் நூலக நேயர் தினமாக கொண்டாடப்படும். நாளை ஞாயிறு மாலை 5.30 மணியளவில் நூலக வளாகத்தில் மாணவர்களுடன் நூல் – நூலகம் – வாசிப்பு குறித்த உரையாடல் நடைபெறும்.. வாய்ப்புள்ளோர் வருக…
Read more

அஞ்சுமன் நூற்றாண்டு வரலாறு

ஒரு நூலகம் என்ன செய்யும்? நூற்றாண்டு காணும் அஞ்சுமன் என்ன செய்யும்? மாபெரும் தூரநோக்கு சிந்தனையாளரான மௌலவி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாக்கவி எதை வித்திட்டு வளர்த்துச் சென்றார்..? அறிந்திட, அறிந்து தெளிந்திட சென்னை சட்ட பல்கலைக்கழக ஆய்வறிஞர் தாஜ் ஃரிபாவின் இந்த காணொலியைப் பாருங்கள்.. இணைப்பு பின்னூட்டத்தில்.. #அஞ்சுமன்_நூலக_நூற்றாண்டு2026
Read more

மதரஸா கல்வி மற்றும் சமூக சவால்கள்: பேராசிரியர் வருகையின் விவரம்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் Sahul Hameed தனது சக பேராசிரியர்களுடன் கடந்த திங்கள் அன்று அஞ்சுமன் நூலகத்திற்கு வருகை புரிந்தார்.. தனது முனைவர் பட்ட ஆய்வு ‘மதரஸா கல்வியில் நவீன போக்குகள் – தொடர் மேம்பாடு’ குறித்த தகவல்களைத் திரட்டிச் சென்றார்கள்.. காலையில் தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் அவர்களுடன் பல்வேறு தலைப்புகள் குறித்து உரையாடினோம்.. மதரஸா என்றாலே பழமைவாத பழம் பஞ்சாங்கம் என்ற ஒற்றைச் சிந்தனையில் உழலும் நவீன சிந்தனையாளர்களுக்கு மத்தியில் […]
Read more
Cart