நூல்களைச் சேகரித்து வைத்துள்ள ஒரு வாசிப்புச் சாலையாக மட்டுமல்லாமல் சமுதாய இளைஞர்களின் மேம்பாட்டுக்கு இந்த நாலகம் பயன்தரும் வகையில் செயல்படுகிறது என்பது மேலும் பெருமை சேர்ப்பதாகும். இளைய தலைமுறைக்கு நாலகச் சிறப்புகளையும் வாசிப்பின் இன்றியமையாமையையும் எடுத்துக்கூறி செயல்படத் தூண்டும்படியும் வேண்டுகிறேன்.
புதுச்சேரி விடுதலைப் போராட்டக் காலத்தில் பொதுவுடமை இயக்கத் தலைவர் சுப்பையா மற்றும் தோழர்களைக் கோழி தன் குஞ்சுகளை அடைகாத்தது போல் பாதுகாத்த பெருமை கோட்டக்குப்பம் மண்ணுக்கு உண்டு. இந்த நூலகத்தில் பல அரிய நூல்கள் இருப்பதும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பதும் மிகுந்த பெருமைக்குரியது. இந்த நூலகத்தை புனரமைத்து மிக சிறப்பாக நடத்தும் இளைஞர் குமுவினருககுப் பாராட்டுக்கள்.
மக்களுக்கு அவசியமான இப்புத்தக நிலையத்தை - உத்தம ஸ்தாபனத்தை நடத்துபவர்களின் உண்மை ஆர்வமும் திறனும் பாராட்டுதற்குரியுது.
கோட்டகுப்பத்தின் வணிகப் பிரமுகராகவும், மார்க்க மேதையாகவும் விளங்கிய மௌலானா அப்துல்ஹமீது பாக்கவி அவர்களின் நன்முயற்சியில் பயன்தரும் நூல்கள் இருக்கின்றன. நகரில் பிரதான இடத்தில் இந்நூலகம் சமூதாயத்தின் நற்செயல் கூடமாகவும் விளங்குகிறது.
இவர்களது வெள்ளிவிழா மலரில் (1951) குறிப்மிடப் பட்டுள்ள வேலைத் திட்டத்தில் தீவு போன்ற சமுதாய வளர்ச்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி அப்போதே இருந்திருப்பது தெரிகிறது, இன்னும் ௯ட அது நிறைவேறாதது சமுதாய அவலமாகும். இந்த நூலகம் மிகப் பெரிய கலாச்சார மையமாக உருப்பெறக்கூடிய வாய்ப்பை வெளிக்காட்டுகிறத. துஆச் செய்கிறேன்..
பழம் பெரும் நூலகம் கண்டு மகிழ்ந்தேன், ஆய்வுக்கு உதவும் வகையில் நூல்கள் சேகரிக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது, நூலகம் மேலும் விரிவடைய துஆ செய்கிறேன்.
பழமையான வரலாற்று பொக்கிஷங்களைத் தன்னுள்ளே வைத்துள்ள இந்நூலகத்தில் என் இன மக்களின் வரலாறை அறிந்துகொள்ள விரைவில்
முகாமிட இருக்கிறேன்... இன்ஷா அல்லாஹ்...
அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் கோட்டக்குப்பத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இந்த ஊர் மக்கள் நூல்களை படிப்பதிலும், வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பதிலும் உள்ளார்ந்த அர்வம் மிகுந்தவர்கள் என்பதற்கு இந்நூலகம் ஓர் அழகிய அத்தாட்சியாகும்.
இந்நூலகத்தில் உள்ள புத்தகங்கள் நமக்கு புத் அகங்கள் தா வல்லவை, நாடகத் தமிமுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பளிச்செனத் தெரிகிறது இங்குள்ள நூல்களில். இதன் நிறுவனர் ஒரு ஆலிம் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி
50 வருடங்கள் பழமையான நூல்கள் மற்றும் இதழ்களைக் காணும்போது மிகவும் மகழ்ச்சியாகவுள்ளது. நீண்ட நெடிய பாரம்பரியமிக்க இந் நூலகம் அடுத்த தலைமுறைக்கும் அறிவுப் புரட்சி ஏற்படுத்தட்டும்.
Mr. Jamal A. Shehab,
Ex Minister of Justice, Kuwait
Mr. Hamdan Mohammed UAE.,
Executive Director, Halal Council, Croatia
Dr. Hani Al Mazidi,
Associate Research Scientist,
Institute of Scientific Research, Kuwait.
Ms. Nusrat Munir.,
CEO, Fire works Group, Mauritius
Ms. Amal Khalil Kabalan,
Arab & Islamic Protocol, Argentina
We are really happy to see this library and we are so embrassed. We are surprised to see the work done here. All the best.
மக்கள் எல்லாத் தேவைகளுக்கும் இதனை நாடிவருகின்ற சமுதாயக் கூடமாக இந்நூலகம் அமையும் சூழலை உருவாக்க வேண்டும்.
ஆய்வாளர்களின் வே நீதாங்கல் இந்த வேடந்தாங்கல் நூலகம். இஸ்லாமியத் தமிழ இலக்கியக் கழகத்தின் ஆறாம் ஆண்டு பெருவிழாவை 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இவ்வூர் மக்கள் துணையோடு அஞ்சுமன் நடத்திய போது, அம்மாநாடு “ஆறாண்டுகளில் நூறாண்டு சாதனை” என சிராஜுல் மில்லத் அவர்களின் பாராட்டைப் பெற்றது. நூலக வளர்ச்சி சமுதாய வளர்ச்சியாக அமையும். நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

25.04.1960 காயிதே மில்லத் மு. முஹம்மது இஸ்மாயில் சாஹிப்

சிராஜுல்மில்லத் ஆ.கா.அணி அப்துஸ்ஸமது சாஹிப்

15.05.1994 எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத், சித்தார் கோட்டை

29.06.2003 டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, துணைத்தலைவர், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

09.06.2015 ஜனாப் ப. அப்துல் சமது, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

03,08.2015 முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், தலைவர், தமிழ் மாநில முஸ்லிம் லீக்.

16.08.2015 மெளலவி முஹம்மது இலியாஸ் ரியாஜி

27.09.2015 பாஸ்டர் பி. எட்வின்., மாநில செயலர், விடுதலை சிறுத்தைகள்.., தோழர் இரா மங்கையர்செல்வன் அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்

02.11.2015 Distinguished Delegates from the Muslim world

10.11.2015 ஜனாப் இப்னு சவுத், இயக்குநர், ஜன்சேவா கூட்டுறவு வங்கி, சென்னை
