அஞ்சுமணில் மதரஸா ஆரம்பிக்கப்பட்டது. காலையில் மாணவர்களுக்கான மார்கக் கல்வியும் மாலையில் ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டன. இதே ஆண்டு (1961) மின்சாரவசதி கோட்டகுப்பம் வந்தடைந்தது. இதற்கான முயற்சியில் 1940 முதல் அஞ்சுமன் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் முட்டுக்கட்டை ஏற்பட்டது. மீண்டும் இதற்கான பணியை முழுமூச்சுடன் முன்னெடுத்துக் காரியம் காட்டியது அஞ்சுமன் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் லால்பக்கீர் சாஹிப் அவர்கள்.