ஏறத்தாழ பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அஞ்சுமன் நூலகம் மீள் திறக்கப்பட்டது. தற்போதைய தலைவர் மருத்துவர் எல்.எம். ஷரீப் மற்றும் சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த காஜி ஜைனுல் ஆபிதீன் உள்ளிட்டோர் அஞ்சுமனுக்குப் புத்துயிரூட்டி புதுப்பொலிவு கூட்டிப் புனரமைத்தனர். ஜாமிஆ ரப்பானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மெளலானா முஹம்மது சுல்தான் தேவ்பந்தி நிகழ்வில் உரையாற்றினார்.