புதுச்சேரி விடுதலைப் போராட்டக் காலத்தில் பொதுவுடமை இயக்கத் தலைவர் சுப்பையா மற்றும் தோழர்களைக் கோழி தன் குஞ்சுகளை அடைகாத்தது போல் பாதுகாத்த பெருமை கோட்டக்குப்பம் மண்ணுக்கு உண்டு. இந்த நூலகத்தில் பல அரிய நூல்கள் இருப்பதும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பதும் மிகுந்த பெருமைக்குரியது. இந்த நூலகத்தை புனரமைத்து மிக சிறப்பாக நடத்தும் இளைஞர் குமுவினருககுப் பாராட்டுக்கள்.